Sunday, October 26, 2008

செய்தி துளிகள்

வைகோவை கைது செய்ய முதலில் அறிக்கை விட்டவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதான் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்

அமைதி இல்லாமல் நீடித்த வளர்ச்சியை அடைய முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சென்னை: விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு செயல்பட்டு வரும் திமுக அரசை, மத்திய அரசு கலைப்பதுடன், முதல்வர் கருணாநிதியை கைது செய்ய வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் வரும் 30ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்.

பிரிவினையைத் தூண்டியதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாகர்கோயிலில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுடெல்லி: இலங்கையில் தமிழர்களின் மீதான தாக்குதல் குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் தூதர், பஸில் ராஜபக்சே நேற்றிரவு இந்தியா வந்தார்.

பிரதமர் சிறப்பு விமானம்: மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்களை மறுத்த பிரதமர் மன்மோகன் சிங், பொதுத் தேர்தல் திட்டமிட்ட காலத்திலேயே நடைபெறும் என்றும, நாடாளுமன்ற நடவடிக்கைகள் முன்கூட்டியே தள்ளிவைக்கப்பட்டதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் உடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் தேவகவுடா, அடுத்த சட்டமன்றத் தேர்தலின் போது பகுஜன்சமாஜ் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

தமிழர்கள் மீது இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டுவரும் சிறிலங்க அரசிற்கு செய்துவரும் நேர்முக, மறைமுக இராணுவ உதவிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய சமுதாய உதவித் திட்டத்திற்கு ம‌த்‌திய அரசு இதுவரை ரூ.1,734.87 கோடி நிதியை மாநிலங்களுக்கு அளித்து‌ள்ளது எ‌ன்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் சாஹு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பெங்களூர்: கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்த முதல்வர் எதியூரப்பா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் நவம்பர் 4ம் தேதி டெல்லி செல்கின்றனர்.

சென்னை: பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார்.

நாகர்கோவில்: ராஜிவ் கொலையாளி நளினியை பிரியங்கா சிறையில் சந்தித்த பின்னர்தான் தமிழ்நாட்டில் புலிகள் ஆதரவு குரல் அதிகரித்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறினார்.

சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கான்பூர்: கான்பூர் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, அங்கு மாணவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கேன்டீனில் இருந்த மாணவர்களை சந்தித்து அவர் உரையாடி விட்டுச் சென்றார்.

சென்னை: விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. அவர்களை அழித்து விட்டுத்தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அதிபர் ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது. ராணுவ ரீதியிலான தீர்வு மிகக் கடினம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறியுள்ளார்.

No comments: