Saturday, October 25, 2008

செய்தி துளிகள்

சென்னை: சென்னை கொடுங்கையூரில் ராஜிவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளனர்.

சென்னை: ராஜீவ் காந்தியின் சிலை உடைகப்பட்டுள்ளதன் மூலம் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் துணிச்சலாக நடமாடிக் கொண்டிருப்பது உறுதிப்படுத்துகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மெல்போர்ன்: சச்சின் டெண்டுல்கர் ஒரு பொய் சொல்லி. மிகவும் மோசமான ஆட்டக்காரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறைஸ்ட் கூறியுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி: ஒரிஸ்ஸாவில் நடந்த கலவரத்தின்போது தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அந்த அயோக்கியர்கள் மீது சிபிஐ நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீ கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மதுரை: விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த சுப்ரமணியம் சுவாமி தலைமையிலான தமிழக ஜனதாக் கட்சியின் மதுரை அலுவலகத்தை புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் மற்றும் வக்கீல்கள் அடங்கிய குழுவினர் இன்று தாக்கி சூறையாடினர்.

சென்னை: சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கியிருந்த ரூ. 196.37 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை இன்று போலீஸார் அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்தனர்.

புதுடெல்லி: நாட்டில் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், டிசம்பர் 10ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதற்கு பொறுப்பேற்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

ரா‌ஜீ‌வ் கா‌‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை அனுப‌வி‌த்து வரு‌ம் ந‌ளி‌‌னி பொது ம‌ன்‌னி‌ப்பு‌க் கோ‌ரி தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மே‌ல்முறை‌யீ‌ட்டு ம‌னுவை ஏ‌ற்று த‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌‌ம் தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளது.

நாட்டிலேயே முதலாவதாக கருப்பை புற்றுநோய்க்கு கார்டாசில் என்ற தடுப்பூசி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

No comments: